உத்திரமேரூர்: உத்திரமேரூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம் நேற்று நடந்தது.
காஞ்சி மாவட்ட தலைவர் காஞ்சி சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அழிசூர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் சுரேஷ் வரவேற்றார். இதில் பெண்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் பாலியல் படுகொலை உள்பட பல்வேறு சம்பவங்களை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.