சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள்ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்” என்று கேள்வி கேட்டுள்ளார்.