×

எல்லை தாண்டிய சீன வீரரை விடுவிக்க சற்று தாமதமாகும்

லடாக்: லடாக்கில் டெம்சோக் அருகே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைந்தார். அவரை இந்திய வீரர்கள் பிடித்து விசாரித்தனர். அந்த வீரர் தவறுதலாக வந்தது தெரியவந்தது. உரிய நடைமுறைகளை பின்பற்றி சீன வீரர் திருப்பி அனுப்பப்படுவார் என இந்திய ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் பிடிபட்ட சீன வீரர் அடுத்த சில நாட்களுக்கு விடுவிக்கப்படமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன் நிபுணர்கள் மூலமாக விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Tags : player ,border ,Chinese , It was a bit late to release the Chinese soldier who had crossed the border
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...