×

பீகாரில் மாணவியை கர்ப்பமாக்கிய தோழியின் தந்தை கைது

வைசாலி :பீகார் மாநிலம் வைசாலி அடுத்த படேபூரில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவி, பக்கத்து வீட்டில் உள்ள தனது தோழி சஹேலியின் வீட்டிற்கு கல்வி கற்கச் செல்வது வழக்கம். கடந்த 6 மாதத்திற்கு முன் ஒரு நாள் தனது தோழியின் வீட்டிற்கு அந்த மாணவி சென்றார். அப்போது தோழி அவரது வீட்டில் இல்லை. ்அந்த சமயத்தில் சஹேலியின் தந்தை வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக மாணவியை பார்த்த அவர், பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், ‘இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால், உனது தம்பிகளை கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி உள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.

தனது பெற்றோர் மற்றும் தோழியிடம் தனக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. இப்படியாக அச்சத்துடனே கடந்த 6 மாதமாக வீட்டில் எப்போதும் போல் இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பெற்றோர் விசாரித்தனர். ஆனால், மாணவி தனக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்கார விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி 6 மாத கர்ப்பிணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் மாணவியிடம் தீர விசாரத்ததில், முழு விஷயமும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் மீது ஹாஜிபூர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது கர்ப்பத்தை உறுதிப்படுத்திய போலீசார், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை (தோழியின் தந்தை) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : student ,Bihar , Student in Bihar, pregnant, friend's father
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...