×

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா: கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறுத்தம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ‘ஜன கண மன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்குகிறார். இதனையடுத்து, தன்னைத்தானே பிரித்விராஜ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனகனமண படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் நடிகர் பிரித்வி ராஜ் மற்றும் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆன்டனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் மொழி, அபியும் நானும் உள்பட தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,actor ,Malayalam ,Prithviraj: Shooting ,Kochi , Actor Prithviraj, Corona, Kochi, shooting, stop
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...