×

வேதா இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ்..!!

சென்னை: வேதா இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஜெ.தீபா, தீபக்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜெ.தீபா, தீபக் வருமான வரித்துறை இணை ஆணையர் ஆகியோருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை  நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. மேலும், நினைவு இல்லமாக மாற்றுவதற்காக வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை
சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.  இதில் 24,322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

இந்நிலையில், இந்த இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், வேதா இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : J.Deepa ,Deepak ,Vedha ,house , Vedha House, Compensation Amount, Notice
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...