×

பழனியில் போலீஸ் தாக்கியதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்..!

பழனி: பழனியில் போலீஸ் தாக்கியதாக கூறி இம்ரான் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் தேன்மொழி இம்ரானை தாக்கியதாக புகார் எழுந்தது. பழனியில் வசித்து வருபவர் இம்ரான், இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மேலும், இம்ரானுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பழனியில் இருக்கக்கூடிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை விசாரிப்பதற்காக காவல் ஆய்வாளர் தேன்மொழி, கடந்த 4 நாட்களாக இம்ரானை விசாரணைக்காக அழைத்து இருக்கிறார். காவல் நிலையம் சென்ற இம்ரானை தகாத வார்த்தையால் பேசியும், பெண் உறவினர்களை வைத்து சாடியும், அவரை தாக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த இம்ரான் கான், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து, இம்ரான் கானின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில் தான், அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் திரண்டு திண்டுக்கல் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக இளைஞரை அழைத்து,  தகாத வார்த்தையால் பேசியும் தாக்கியும் தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். மேலும் அவர் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த தற்கொலையில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தேன்மொழி உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : suicide ,Relatives ,Palani ,road , commits , suicide , police , Palani
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்