சென்னை: சென்னை காசிமேட்டில் சிறிய எஞ்சின் விசைப்படகு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால், நாகை, கடலூர் மீனவர்கள் அதிக குதிரை திறன் உடைய விசைப்படகை பயன்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக குதிரை திறன் உடைய படகில் சென்னையில் மீன்பிடிப்பதால் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.