×

கார் கதவு திடீரென திறந்ததால் பைக்கில் சென்றவர் லாரியில் மோதி பலி

திருவள்ளூர்: சாலையில் நின்றிருந்த காரின் கதவு திடீரென திறந்ததால் பைக்கில் சென்றவர் லாரியில் சென்றவர் பரிதாபமாக பலியானார். பூந்தமல்லி அடுத்த இருளை பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்(23). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் பணி முடிந்த வீட்டிற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆந்திர பதிவு எண் கொண்ட காரின் ஓட்டுநர் திடீரென காரின் கதவை திறந்தார். அப்போது பிரவீன் சென்ற மோட்டார் சைக்கிள் காரின் கதவில் மோதி எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் அவரின் ஹெல்மெட் உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : The car door suddenly opened and the person on the bike collided with the truck
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...