சென்னை: திருச்சியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மேலும், அவர் தெரிவித்ததாவது: முதல்வர் பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. மேலும், முதல்வர் மீதான புகார் மீது மேம்போக்காக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில் முதல்வர் பதவி விலகி வழக்கை நேர்மையாக எதிர்கொண்டு இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.