×

வாழ்வா-சாவா நெருக்கடியில் சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்

* ஓட்டை கப்பலை கொண்டு அணியை டோனி கரை சேர்ப்பாரா?
*  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்

அபுதாபி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை 9 போட்டியில் 3ல் மட்டுமே வென்றுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் வாட்சன், டுபிளசிஸ் தவிர மற்ற யாரும் பார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதவ் உப்புக்கு சப்பாணியாக அணியில் நீடிக்கிறார். பிராவோ காயம் வேறு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டை கப்பலை கொண்டு அணியை டோனி கரை சேர்ப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுபுறம் ராஜஸ்தான் அணியும் பரிதாப நிலையில் உள்ளது. அடுத்து வரும் 5 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி உள்ளது. பேட்டிங்கில் யாரும் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் மிரட்டுகிறார். இரு அணிகளும் வாழ்வா-சாவா நிலையில் வெற்றிக்கு போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் சென்னை 14, ராஜஸ்தான் 8ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் செப்.22ம் தேதி மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 16 ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : clash ,Rajasthan ,Chennai ,crisis ,death , Life-and-death, crisis, Chennai-Rajasthan, conflict
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...