×

அணைக்கரையில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள முதலை

கும்பகோணம்: அணைக்கரையில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள முதலையை தீயணைப்பு துறையினர் பிடித்து ஆற்றில் விட்டனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள அனைக்கரை கொள்ளிடக்கரை காவிரி ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்தநிலையில் சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று அப்பகுதியில் உள்ள விநாயகம் தெரு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருவிடைமருதூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புதுறை நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது விநாயகம் தெருவில் அந்த முதலையை தீயணைப்பு துறையினர் சாதுர்யமாக மீட்டு கயிறு கட்டி பிடித்தனர். பின்னர் முதலையை கயிற்றில் கட்டியவாறு தூக்கி சென்று அருகே உள்ள கொள்ளிடக்கரை காவிரி ஆற்றில் விட்டனர். முதலையை பிடித்த தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். திடீரென ஊருக்குள் புகுந்த முதலையால் அணைக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : town ,dam ,bank , Crocodile
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்