×

பூவந்தி கண்மாய்க்குள் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

திருப்புவனம்: பூவந்தி கண்மாய்க்குள் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் பைப் பதித்து எரிவாயு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திருப்புவனம் ஒன்றியத்தில் ஏழு ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பூவந்தி கண்மாயில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பைப் லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பூவந்தி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பட்டா நிலத்தில் பைப் பதிக்க நிலத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்குவது என கருத்து கூறப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் பைப் பதிக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டது.

Tags : poovanthi, tank
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...