×

மகாராஷ்டிராவில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை

மும்பை, :மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அடுத்த கோஸ்மி-கிஸ்னெலி வனப்பகுதியில் நேற்று காவல்துறையினருக்கும், நக்சல்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. முன்னதாக நக்சல் தடுப்பு நடவடிக்கை குழு எஸ்பி அங்கித் கோயல் தலைமையிலான குழு, வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியது. போலீசார் தரப்பில் நக்சலுக்கு துப்பாக்கிச் சூடு பதிலடி கொடுத்த போது, 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்ற நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘கட்சிரோலி காவல்துறையின் சி-60 கமாண்டோக்கள் தனோரா தாலுகாவின் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது நக்சலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். போலீஸ் பதிலடி கொடுத்த பின்னர் சில நக்சல்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஐந்து நக்சலைட்டுகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Naxals ,Maharashtra , Maharashtra, Naxals, shot dead
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி