×

கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக அமைச்சர் மிரட்டுகிறார் : அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

சாத்தூர், கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் என்று அமைச்சர் மிரட்டுவதாக அதிமுக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய எம்எல்ஏ ராஜவர்மன், ‘‘நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்க சொன்னார்கள். இப்போது கட்சி நிர்வாகிகள் முன் என்னை தரக்குறைவாக வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே என்னை பார்த்து பேசினால் நான் என்ன செய்வது. அதனால் அவரிடமிருந்து வெளியேறி வந்து விட்டேன்’’ என்றார்.

Tags : Minister ,mercenaries ,AIADMK MLA , Mercenary, murder, minister, AIADMK, MLA, charge
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்