ஹைதராபாத் : தெலங்கானாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்ததற்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவப்படிப்பு, நீட் தேர்வால் எட்டும் கனியாக மாறியுள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், சாதிக்க வறுமை ஒரு தடையில்லை என்பதை மாணவர்கள் நீட் தேர்விலும் சாதனை படைத்துள்ளார்கள்
என்றார்.