சென்னை : நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ள தமிழக மாணவர் ஜீவித் குமாருக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் ஒரு கூலித்தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் அதிக மதிப்பெண்கள் பெற்று வென்றிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். நீட் தேர்வு தரும் அழுத்தத்தால் தற்கொலை வரை செல்லும் மாணவர்களின் மனநிலைக்கு அரசு பள்ளியில் படித்த இந்த மாணவனின் சாதனை நம்பிக்கை தரும் என்பதால் மட்டுமே இந்த பதிவு’ என்று பதிவிட்டுள்ளார்.