×

திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (38). ஏழை விவசாயியான இவர்,  3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே, ஏழுமலை நேற்று  மேய்ச்சலுக்காக தனது மாடுகளை அப்பகுதியிலுள்ள வயல்வெளி பகுதிக்கு ஒட்டி சென்றார். அப்போது, திடீரென பலத்த சப்தத்துடன் தொடர்ந்து இடி இடித்தது.  அதில், மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது இடி விழுந்ததால், மாடு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தது.        
   
இது குறித்து  தகவலறிந்த கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக வருவாய் துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். மேலும், இது குறித்த புகாரின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : thunder ,Thirukkalukkunram , Cow killed by thunder near Thirukkalukkunram
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்