கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ஏரி சாலையில் அரசு பேருந்தில் சோதனை செய்தபோது மாஸ்க் அணியாத பயணிகள் 14 பேர் சிக்கினர். 36 பேர் மட்டுமே பஸ்ஸில் பயணிக்க அனுமதி இருந்த நிலையில் 50 பேரை ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.