ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது பலூன் விரைவு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது. இலங்கை கடற்படை மிரட்டலால் கரை திரும்பியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.