ஆலந்தூர்: கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த கிண்டி பாரதி நகரை சேர்ந்த மணிவண்ணன் (34), ஆலந்தூரை சேர்ந்த ஸ்டீபன் (52), நங்கநல்லூரை சேர்ந்த லிங்கமுருகன் (28), பொழிச்சலூர் பஜார் பகுதியை சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து, 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.