வேளச்சேரி: பள்ளிக்கரணை எம்ஜிஆர் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடந்த 7ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தந்தை சுரேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். போலீசார், போக்சோ சட்டத்தில் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த சிறுமி, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.