சென்னை: அயனாவரம் குன்னூர் ஹைரோடு பகுதியை சேர்ந்த தேவன் பரத் தோஷி, நேற்று முன்தினம் இரவு சென்னை காவல் துறையின் டிவிட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். அதில், தனது தந்தை வாடகை காரில் செல்போனை தவறவிட்டார். டிரைவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், சமூக வலைதள மற்றும் போக்குவரத்து போலீசார், 3 மணி நேரத்தில் அந்த காரை பிடித்து, செல்போனை மீட்டு தேவன் பரத் தோஷியிடம் ஒப்படைத்தனர்.