×

நடிகை கங்கனா, சகோதரி மீது தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது மும்பை காவல்துறை..!!

மும்பை: நடிகை கங்கனா, இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிட்டார் என்ற புகாரின்பேரில் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்தும் விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கடும் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய அவர், சினிமாவில் வரும் மாபியாவை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் அவர் சர்ச்சையாக தெரிவித்தார்.

மேலும், நடிகை கங்கனா ரணாவத்தின் சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாஹில் அஷ்ரப் அலி சையது என்பவர் மும்பை நீதிமன்றம் ஒன்றில் புகார் மனு அளித்துள்ளார்.  அதில், பிரபல நடிகை மற்றும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ளவர் என்று நடிகை கங்கனாவுக்கு தன்னை பற்றி நன்கு தெரியும் என்று தெரிவித்தார்.

அதனால் அவரது டுவிட்டர் பதிவுகள் பலருக்கும் சென்று சேரும் என்று சுட்டி காட்டியுள்ளார்.  அவர் இந்து மற்றும் முஸ்லிம் கலைஞர்களுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறார்.  பாலிவுட் படங்களில் பணியாற்றும் நபர்களை போதை அடிமைகள், சமூகம் சார்ந்த நபர்கள், கொலைகாரர்கள் உள்ளிட்ட வகையில் நடிகை கங்கனா சித்தரித்து வருகிறார் என்றும் தெரிவித்து உள்ளார். நடிகை கங்கனாவின் மின்னணு ஊடக பதிவுகள், டுவிட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதில், நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல் பெயரையும் தனது புகாரில் சாஹில் சேர்த்து உள்ளார். இதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இருவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.  இந்நிலையில், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில், 124ஏ (தேச துரோகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல் ஆகியோர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.

Tags : Kangana ,sister ,Mumbai Police , Actress Kangana, her sister has been charged with treason by the Mumbai Police .. !!
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...