காட்பாடி: காட்பாடி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனியார் மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவலம் என்ற இடத்தில் வில்வநாதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்த தனியார் திருமண மண்டத்துக்கு அறநிலையத்துறை சீல் வைத்தது.