×

சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது மாநகர பேருந்து மோதி 2 இளம்பெண்கள் பலி: சேலையூரில் பரிதாபம்

தாம்பரம்: பெருங்களத்தூரை சேர்ந்தவர் மேரி ரோஸ்லின் (20), தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது தோழி நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த கலைவாணி (19), மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவர்கள், நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். சேலையூர் அருகே சென்றபோது, சாலை பள்ளத்தில் சிக்கி, தடுமாறி இருவரும் சாலை நடுவே விழுந்தனர்.

அப்போது, வேளச்சேரியில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி அசுர  வந்த மாநகர பேருந்து, அவர்களின் மீது ஏறி இறங்கியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 2 பேரின் சடலங்களை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து டிரைவரை கைது செய்தனர்.



Tags : teenagers , 2 teenagers killed in road mishap in Saleeyoor
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...