×

உணவு தினத்தை முன்னிட்டுஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள்

காஞ்சிபுரம்: உலக உணவு தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பு சார்பில் சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் விளிம்புநிலை மக்களுக்கு  சுய தொழில் ஆரம்பித்து கொடுத்து, அவர்களை சொந்த காலில் நிற்க உதவி செய்தல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது. இந்நிலையில், உலக உணவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், சென்னை, கோவை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றோர் 280 பேருக்கு நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

Tags : Food Day , Food parcels for the needy ahead of Food Day
× RELATED பாடந்துறை அங்கன்வாடியில் உலக அயோடின்...