×

கொரோனா காலத்தில் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்கு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று முன்தினம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜ சார்பில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கட்சியினர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஏராளமான வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். கொரோனா நோய் தொற்று காலத்தில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றது, கூட்டம் கூட்டியதாக பாஜ மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் மீது பழநி டவுன் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Tags : Meeting ,Corona ,Annamalai , Meeting during the Corona period: The case against Annamalai
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...