×

ஜெயலலிதா மறைவுக்கு பின் சதி நேரம் வரும்போது கூறுவேன்: மாஜி தலைமை செயலாளர் பேட்டி

கோவில்பட்டி:  வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு  மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது, யார் என்ன நினைத்தார்கள்? என்று தெரியவில்லை. நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால் ஒரு சதி நடந்திருக்கிறது.  அதை நேரம் வரும்போது நான் சொல்வேன்.  இவ்வாறு அவர் கூறினார். தமிழக தலைமை செயலகத்தில் சோதனை நடந்தபோது இவர்தான் தலைமை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : demise ,Jayalalithaa ,Chief Secretary , When the time for conspiracy comes after Jayalalithaa's demise I will say: Interview with former Chief Secretary
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...