×

தங்கக்கடத்தல் புகாரில் சிக்கியுள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் புகாரில் சிக்கியுள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Sivasankaran ,Kerala IAS ,hospital , Sivasankaran, IAS
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து