×

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதை தமிழக அரசு ஏற்க மறுத்தது உள்நோக்கம் கொண்டது - பாலகுருசாமி சர்ச்சை கருத்து

சென்னை: ஏழை மாணவர்களின் கல்வி என்பதற்காக கல்வியின் தரத்தை உயர்த்தாமல் இருக்க முடியுமா? என்று சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் பல்கலை. நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்விக்கொள்கை தேவை என்று பாலகுருசாமி பேட்டியளித்துள்ளார். இலக்கிய அளவில் தமிழ் சரியானது தான்; அறிவியல் அளவிற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை என்று பாலகுருசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதை தமிழக அரசு ஏற்க மறுத்தது உள்நோக்கம் கொண்டது. ஏழை மாணவர்கள் படிப்பதற்காக தனியாக கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,Anna University , Anna University, Balakurusamy
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...