சென்னை: நடிகை குட்டி பத்மினி மீதான நில மோசடி புகாரின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை மடிப்பாக்கம் போலீசார் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவரின் ரூ.8 கோடி மதிப்பு நிலத்தை போலி ஆவணம் மூலம் குட்டி பத்மினி விற்றதாக புகார் எழுந்துள்ளது. மடிப்பாக்கம் போலீசில் பதிவான வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றக்கோரி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.