×

அரியானா மாநிலத்தில் ஒன்றரை ஆண்டாக கழிப்பறையில் அடைத்து வைத்து மனைவிக்கு சித்ரவதை : ஈவு இரக்கமற்ற கணவன் கைது

பானிபட், :அரியானா மாநிலத்தில் ஒன்றரை ஆண்டாக மனைவியை கழிப்பறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் 35 வயதான திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பறையில் பூட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் சென்றது. சம்பவ வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இப்போது அவரது உறவினரிடம் அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட மகளிர் பாதுகாப்பு அதிகாரி ரஜ்னி குப்தா கூறுகையில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அந்த பெண்,  கழிப்பிட அறையில் மனிதாபிமானமற்ற நிலையில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவரால் நடக்கக்கூட முடியாத நிலையில் பலவீனமாக இருந்தார். அடைத்து வைக்கப்பட்ட காலங்களில் அவருக்கு போதுமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த பெண் 17 ஆண்டுகளுக்கு முன்பு நரேஷ்குமார் என்பவரை மணந்தார். அவருக்கு 15 வயது மகள் மற்றும் 11 முதல் 13 வயதுக்குட்பட்ட இரண்டு மகன்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவர் நரேஷ்குமார் தனது மனைவியின் மனநிலை சரியில்லை என்று கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அடையாளம் காணவும், நாங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தார். பெண்ணின் கணவர், தனது மனைவிக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறினாரே தவிர, அவருக்கு சிகிச்சையளித்தது குறித்த ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதனால், மனைவியை கொடுமை படுத்த அவரை கழிப்பறையில் அடைத்து வைத்திருந்தார் என்பது தெளிவாக விசாரணையில் தெரியவந்தது. அதனால், நரேஷ்குமார் மீது ஐபிசியின் 498 ஏ மற்றும் 342 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சனோலி போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்’ என்றார்.

Tags : Haryana ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...