×

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை அனுப்பியது மத்திய அரசு..!!

டெல்லி: கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்ட குழுவை அனுப்பியது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. குழுவில் இணை செயலாளர், பொது சுகாதார நிபுணர், மருத்துவர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். தொற்று தடுப்பு, திறன் மிகு மருத்துவ மேலாண்மை போன்றவற்றில் மாநிலங்களுக்கு மத்தியக் குழு உதவும். கர்நாடகா 10.1 %, கேரளா 4.3%, மேற்கு வங்கம் 4.2%, ராஜஸ்தான் 2.3%, சத்தீஸ்கர் 2.1% பாதிப்பு உள்ளது.


Tags : committee ,Central Government ,states , Corona, 5 State, High Level Committee, Central Government
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...