சென்னை: அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு காலதாமதம் என்றாலும் வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவை மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.