×

வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை பலாத்காரம் : மத போதகர் அதிரடி கைது

திருப்பதி,:வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அதே பகுதியில் உள்ள மதபோதகர் தேவசகாயம் என்பவர் வீட்டில் ேவலைக்கு சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மதபோதகர், இளம்பெண்ணை பலாத்காரம் செய்தாராம். இதை இளம்பெண் தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், திருப்பதி காஜல மண்டலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்  மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்டோர் திருப்பதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் திருப்பதி எஸ்பி ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் காஜல் மண்டலம் போலீசார், மதபோதகரான தேவசகாயத்தை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : housemaid , Teen, Rape, Pastor, Action, Arrest
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...