சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மண்டல அலுவலர் உத்தரவின் பேரில் எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணியாற்றிய 42 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.