சென்னை: பாரதிய ஜனதா கட்சி சமூக நீதிக்கு எதிராக செயல்படும் கட்சி என்று முத்தரசன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை என்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் எனவும் முத்தரசன் தெரிவித்தார்.