மதுரை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்.