சென்னை: தூக்கு மேடையிலும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு வீரத்திற்கு இலக்கணமாய் விளங்குபவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என பழனிசாமி தெரிவித்துள்ளார். என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.