×

எல்.ஐ.சி அதிகாரி தற்கொலை

திருநின்றவூர்: ஆவடியை அடுத்த திருநின்றவூர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (57).இவர் சென்னை, அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயா(52). இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று காலை ரவிசங்கர் வேலைக்கு செல்லாமல்  வீட்டு மாடியில் உள்ள அறையில்  ஓய்வு எடுக்க சென்றார். மதியம் மனைவி விஜயா சாப்பிடுவதற்கு அழைக்க சென்றார். அப்போது, ரவிசங்கர மின் விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.  அவரை மீட்டு திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிசங்கர் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ரவிசங்கர் பலரிடமும் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறி வந்துள்ளார். மேலும்,  கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர் எழுதிய கடிதத்தில், கடன் பிரச்னையால் தற்கொலை முடிவு எடுத்து உள்ளேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

Tags : officer ,LIC ,suicide , LIC officer commits suicide
× RELATED வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்...