சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் 12,000 பேரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற குறைவான வருவாய் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதார செலவுகளைப் பூர்த்தி செய்ய இயலாது. எனவே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.