×

கொரோனாவில் மீண்ட இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு மீண்டும் தொற்று

சேலம்: சேலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 300 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. காவல்துறையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர்கள் ஆனந்தகுமார், நாகராஜன் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 173 பேரை தாக்கியுள்ளது. இதில் 158 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் கொரோனாவிற்கு பலியாகினர். துணை கமிஷனர் செந்தில் உள்பட 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய சேலம் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், பெண் ஏட்டு உள்பட 3 பேர் மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் போலீசாரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : inspector ,policemen , Re-infection of 3 policemen including the inspector who overcame the corona
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு