×

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

 சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூர்- நாகர்கோவில் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் (06063) அக்டோபர் 23, 24, 29 நவம்பர் 12, 15 ஆகிய தேதிகளில் 6.55 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவில்- சென்னை எழும்பூர் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் (06064) அக்டோபர் 26, 27, நவம்பர் 1, 15, 16 தேதிகளில் நாகர்கோவில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இது முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.


Tags : Nagercoil , Special train to Nagercoil
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...