×

ஊரடங்கால் திருமணங்கள் ரத்து மண்டப முன்பணம் திரும்ப தரும் அரசாணையை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனாவால் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பித்த தமிழக அரசு மார்ச் 16ம் தேதிக்கு முன் திருமணங்களுக்கு மண்டபங்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் திருமணம் நடத்திக் கொள்ளலாம் என்றும், அதன்பின் முன்பதிவு செய்து திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தால், முன் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், மண்டபத்தை பராமரிப்பது, மண்டபத்தை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் உள்ளதால் ரத்தான திருமணங்களுக்கான முன்பதிவு தொகையை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்க நிர்பந்திக்க கூடாது. இது சிவில் விவகாரமென்பதால், காவல் துறையினர, மாவட்ட ஆட்சியர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசாணைப்படி முன்பணத்தை திருப்பி செலுத்த வேண்டியது மண்டப உரிமையாளர்களின் கடமை என்று அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படியும், அக்டோபர் மாதம் பிறப்பித்த ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை தாக்கல் செய்யுமாறும் அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Govt ,cancellation ,Government High Court , Case against Govt
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...