×

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை

சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால் அக்டோபர் 22ல் விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்குகளை விசாரிப்பர். நீதிபதிகள் ஆஷா, சரவணன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். மதுரை கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : High Court ,festival ,Dasara , Dasara festival, court, holiday
× RELATED கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை