கேரளா: மலையாளத்தின் துலாம் மாத பூஜையை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்பட உள்ளது. கொரோனா விதிமுறையுடன் பரிசோதனை முறையில் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலையில் தரிசனம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் எனவும், ஆன்லைன் முன்பதிவு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.