மதுரை: அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனை அளிக்கிறது என தெரிவித்த நீதிபதிகள் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.