சேலம்: சேலம் சிவனடியார் சரவணன் தற்கொலை வழக்கில் தேவூர் காவல் நிலைய விசாரணையை சேலம் மாவட்ட எஸ்.பி. கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவனடியாரின் வீடியோ பதிவையும் ஒரு ஆவணமாக கொண்டு, தேவூர் காவல் நிலைய ஆய்வாளரே விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.