×

800 திரைப்படத்தில் நடித்தால் விஜய் சேதுபதி துரோகியாக பார்க்கப்படுவார்; ராமதாஸ்

சென்னை, : மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி, 800 திரைப்படத்தில் நடித்தால் துரோகியாக பார்க்கப்படுவார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:   

விஜய் சேதுபதி தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். மிகவும் கடினமான காட்சிகளைக் கூட எளிதாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.  அப்படிப்பட்டவர் 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்துகொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை. அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே குடும்பத்தை புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில் ஆகும். விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்பு சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார். மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்த படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Vijay Sethupathi ,traitor ,Ramadas , Vijay Sethupathi, traitor, Ramdas
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்